எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!
நமது பண்பாட்டு ரீதியான பழக்கவழக்கங்களில் உள்ள அர்த்தங்களை விவரித்தவித்யாதரன், எலுமிச்சையின் குணங்களையும்,அதனைப் பயன்படுத்துவதில் உள்ளரகசியங்களையும் விளக்கினார்.
"மஞ்சள் மங்களகரமான நிறம். திருமணம்உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு கொள்முதல் செய்யவேண்டிய பொருட்களில் பட்டியலைத் தயாரிக்கும்பொழுதும், புத்தாடை புனையும் பொழுதும்,நிச்சயதார்த்தம் செய்து எழுதும் ஓலையிலும்ஒரு ஓரத்தில் அல்லது 4 ஓரத்திலும் மஞ்சளைத்தடவுகின்றோம். ஏனெனில் அது மங்களமானது.
மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத்தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சைஉள்ளது. வேதங்களில் அதர்வன வேதத்தில்முதலில் தேவதைகள், அதிதேவதைகள்ஆகியவற்றிற்கு பரிகாரப் பூஜைகள் செய்யும்போது எலுமிச்சைப் பழத்தை பலியிடுவதுவழக்கம். அதற்குக் காரணம், அந்தப் பழம்ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. ஜீவன்உடையதைதானே பலியிட முடியும்.
![]() | |||
|
எலுமிச்சைக் கன்று, மரம் ஒரு வீட்டில்இருந்தால் வைத்தியரிடம் செல்ல வேண்டியதேவையில்லை, வாஸ்து பார்க்க வேண்டியஅவசியமும் இல்லை என்று முன்னோர்கள்கூறுவார்கள்.
குணமும், வீடுகட்டியிருக்கும் மனை, வீடுஅமைந்திருக்கும் மனைமற்றும் கட்டட அமைப்புகளில்உள்ள குறைகளை நீக்கும்சக்தி எலுமிச்சைக்குஇருப்பதாகசொல்லப்பட்டுள்ளது.
கனிகளின் அரசன் என்று எலுமிச்சையைசொல்லலாம். அதனால்தான் பிரபலமானவர்களைப்பார்க்கும் போது மரியாதை நிமித்தமாக இந்தக்கனியைத் தருவது வழமை.
நோயுற்றவர்களைக் காணச் செல்லும் போதும்,நோயுற்றவரிடம் காணச் செல்பவர்கள்எலுமிச்சையை அளித்து நலம் விசாரிப்பதுபழக்கத்தில் உள்ளது. இதில் இரண்டு முக்கியஅம்சங்கள் உள்ளன.
நோய்வாய்பட்டவரிடம் இருந்து எதுவும் பார்க்கவருபவரிடம் தொற்றாது. அதே நேரத்தில்நோயுற்றவர் குணமாகவும் எலுமிச்சை உதவும்.எனவேதான், அந்தப் பழக்கம்கடைபிடிக்கப்படுகிறது.
![]() |
எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக்கனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரிநாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாககாவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்காரதெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து,அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழிஎடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களதுபடைகளை வழி நடத்திச் செல்வார்கள். போரில்வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும்எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும்வழக்கம் இருந்தது.
பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால்பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளிஅம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கிவழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன்,பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட பல முக்கியஆலய வழிபாடுகளில் பிராதானமாகஅமைந்துள்ளதைக் காணலாம்.